Monday, February 7, 2022

சக்தி அம்சங்கள்

சக்தி அம்சங்கள்     

As quoted in திருமந்திரம் 

திரிபுரை சுந்தரி அந்தரி சிந்துரப்
பரிபுரை நாரணி யாம்பல வன்னத்தி
இருள்புரை ஈசி மனோன்மனி என்ன
வருபல வாய்நிற்கும் மாமது தானே.


                                                                ஆதி பராசக்தி 


                                                                            திரிபுரை


சுந்தரி 



அந்தரி
சிந்தூரி 
பரிபுரை
நாரணி



பலவண்ணத்தி    



ஈஹீ (ஈஸ்வரி )

                                                                                மனோன்மணி 


Friday, June 28, 2019

You are my one and only All - Delight of Existence






त्वमेव माता  पिता त्वमेव ।

त्वमेव बन्धुश्च सखा त्वमेव ।

त्वमेव विद्या द्रविणम् त्वमेव ।
त्वमेव सर्वम् मम देव देव ॥












Meaning:
1: You Truly are my Mother And You Truly are my Father .
2: You Truly are my Relative And You Truly are my Friend.
3: You Truly are my Knowledge and You Truly are my Wealth.
4: You Truly are my AllMy God of Gods.

Monday, January 21, 2019

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க ! what are those 16 blessings?


அம்மா அபிராமி ! பதினாறு  இக சுகம் அருள்வாயே !



கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்கபடு வாராத நட்பும் கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணியிலாத உடலும் சலியாத மனமும் அன்பகலாத மனைவியும் தவறாத சந்தானமும் தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும் தொலையாத நிதியமும் கோணாத கோலு மொருதுன்பமில்லாத வாழ்வும் துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரியதொண்டரொடு கூட்டு கண்டாய் அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையேஆதிகடவூரின் வாழ்வே!அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி! அபிராமியே! 

_அபிராமி பட்டர்

பொருள்
பாற்கடலில் உணர்நிலை உறக்கம் கொள்ளும் திருமாலின் தங்கையாய் ஆதி கடவூரில் திருக் கோவில் கொண்டு, வாழ்வின் அமுதமாய், தொண்டருக்கெல்லாம் தொண்டராய் விளங்கும் ஈசனின் ஒரு பாதி மேனி கொண்ட அபிராமித் தாயே!

அபிராம பட்டர் இந்த பதினாறு பேறுகள் கிடைக்க அன்னை அபிராமியிடம் வேண்டிக்கொள்கிறார்.

1) என்றும் நீங்காத கல்வி, 
2) நீண்ட ஆயுள்,
3) கள்ளம் இல்லாத நட்பு, 
4) என்றும் குறையாச் செல்வம்,
5) எப்போதும் இளமை, 
6) பிணி இல்லாத ஆரோக்கியமான உடல்,
7) முயற்சிகளைக் கைவிடாத மனோபலம், (சலிப்பு வராத மனம்), 
8) அன்பு நீங்காத மனைவி, 
9) புத்திர பாக்கியம்,
10) குறையாத புகழ்,
11) சொன்ன சொல் தவறாமல் இருப்பதற்கான குணம், 
12) எந்தத் தடையும் ஏற்படாத கொடை
13) என்றும் குன்றாச் செல்வச் செழிப்பு, 
14)செங்கோல் வளையாமல் பரிபாலிக்கும் அரசன்,
15) துன்பமில்லாத வாழ்வு, 
16) உன் பாதத்தின்மேல் பக்தி, 
இவையனைத்தும் என்றென்றும் நீ அருள்வாய் தாயே !

Friday, December 7, 2018

Thank you dear almighty! For giving me everything exceeding my Expectation!





மலர்கள் கேட்டேன் ! வானமே தந்தனை !
தண்ணீர் கேட்டேன் ! அமிர்தம் தந்தனை!

எதை நான் கேட்பின் உனையே தருவாய்!
           (   

               I just asked for flowers ! you gave me a garden.!               I asked for water you gave me nectar.!
                        What I should ask for ? To Get your self? 
                       
                        )
காட்டில்  தொலைந்தேன் வழியாய் வந்தனை
இருளில் தொலைந்தேன் ஓழியாய் வந்தனை

எதனில் தொலைந்தால் நீயே வருவாய்!
                              (

 I lost in forest, you came as rescuing way.
I lost in dark, you came as light.
where should I lose myself? so that you will come.
                              )
                  

பள்ளம் வீழ்ந்தேன் ! சிகரம் சேர்த்தனை ! 
வெள்ளம் வீழ்ந்தேன் !கரையில் சேர்ந்தனை

எதனில் வீழ்ந்தால் உன்னிடம் சேர்ப்பாய்!


(
 I fell in a pit you made me reach to peak.
I fell in flood you saved me to reach the shore.
In what  should I fall ? so that I can reach you.
)

Thursday, November 15, 2018

மனதில் உறுதி வேண்டும் ..


மனதிலுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;

நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும்,
மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்.
ஓம் ஓம் ஓம் ஓம்

Monday, October 29, 2018

Three types of Human (மூவகை சீவ வர்க்கம் )

According to Saiva doctrines there are three types of human. Categorised according to their level of consciousness of their living and the level of relationship with the almighty creation.

Three Types

1) சகலர் (one who cannot realise about their existence)

  •  One who is with all the three impurities as such as , 

  • மாயை

  • கன்மம்

  • ஆணவம் 
    •    
    2) பிரளயாகர் (who can partially realise )
    •  One who is without மாயை but still with other 2 impurities , 
    3) விஞ்ஞானர்  (who can fully realise)
    •  One who is without மாயை and கன்மம் but with ஆணவம்

    As expressed by Sekkizhar in பெரியபுராணம் (Periyapuranam).


    உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
    நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
    அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
    மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

    விளக்கம்:

    சகலர் - ஓத முடியாத ஒரு உருவம் . 
    பிரளயாகர் - நிலவு தலையில் உலவும் தலை கொண்ட வடிவம் . 
    விஞ்ஞானர்  - அளவு இல்லாத ஜோதி வடிவம் . 


    And this is re-iterated by Appar in தேவாரம் (Thevaram)





    விறகில் தீயினன் பாலில் படு நெய்போல்
    மறைய நின்றுளன் மாமணி சோதியன்
    உறவு கோல் நட்டு உணர்வுக் கயிற்றினால்
    முறுக வாங்கி கடைய முன் நிற்கவே 


    விளக்கம்:

    விறகு=அரணிக் கட்டை. அரணிக் கட்டையில் தீ இருப்பதும் பாலினில் நெய் இருப்பதும் நமது கண்களுக்கு நேரே தெரிவதில்லை. அரணிக் கட்டையை கடைந்தால் தீ ஏற்படுகின்றது. பாலினைத் தயிராக மாற்றிய பின்னர் மத்தினைக் கொண்டு அதனைக் கடைந்தால் வெண்ணெய் கிடைக்கின்றது. சாணை தீட்டப்படாத மாணிக்கக் கல் பிரகாசமாக இருப்பதில்லை. பட்டை தீட்டப்பட்ட பின்னர் மாணிக்கக் கல் மிகுந்த ஒளியுடன் பிரகாசிக்கின்றது. மேற்கண்ட பொருட்கள் போன்று இறைவனும் மறைந்து நிற்கின்றான். 

    அரணிக் கட்டை என்பது பழங்காலத்தில் தீ மூட்டுவதற்காக பயன்பட்டது. ஒரு அரணிக் கட்டையுடன் மற்றொன்றைத் தேய்த்து தீ எழுப்புதலை கடைதல் என்று கூறுவார்கள். 
    • சகலர்  - விறகில் தீயினன் . சிலருக்கோ விறகில் உள்ள தீயாக இருக்கிறான். Self realisation for them is very difficult as like igniting logs to catch on fire.
    • பிரளயாகர்  - பாலில் படு நெய். சிலருக்கு பாலில் உள்ள நெய்யாக இருக்கிறான். Self realisation is less difficult as like curdling milk and extracting ghee.
    • விஞ்ஞானர் - மாமணி சோதியன்.சிலருக்கு இறைவன் மணியில் உள்ள ஒளி போல வெளிப் படுகிறான். Its easy as like cleaning the opal stone to get the brightness


    உறவு கோல் நட்டு உணர்வுக் கயிற்றினால் முறுக வாங்கி கடைய முன் நிற்கவே
    -   God is hidden and can be sought by curdling with the stick of emotion Bakthi (உறவு கோல்) and with the rope of (உணர்வுக் கயிறு ) knowledge (மெய்யஞானம் )

    சிலருக்கு கடைய முன் நிற்கும்.
    சிலருக்கு வாங்கிக் கடைய முன் நிற்கும் 
    சிலருக்கு முறுக வாங்கிக் கடைய முன் நிற்கும்