Monday, December 15, 2025

ஓவ்வொருவருக்குள்ளும் ஏதோ ஒரு கெட்டித்தனம் இருக்கத்தான் செய்யும்.



 வான்குருவியின் கூடு வல்லரக்குத் தொல்கரையான்

தேன்சிலம்பி யாவருக்கும் செய்யரிதால் - யான்பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது



வான்குருவியின் கூடு 



வல்லரக்கு


தொல்கரையான்



தேன்



சிலம்பி



தூக்கணாங் குருவியின் கூடும், உறுதியான அரக்கும், பழமை கொண்ட கரையான் புற்றும், தேன்கூடும், சிலந்தியின் வலையும் நம்மில் யாவருக்கும் செய்வதற்கு அரிதானவையாகும். அதனால் யாம் பெரிதும் வல்லமை உடையோம் என்று எவரும் தற்பெருமை பேசுதல் வேண்டாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று எளிதானது என்று அறிவீர்களாக” என்பது பொருள்.



தூக்கணாங் குருவிக்கூடு மரத்தில் தொங்கும்போது பார்த்திருப்பீர்கள்.
மரக்கொம்பில் அரக்குப் பூச்சிகள் கொம்பரக்கு என்னும் மெழுகு செய்து
வைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். காட்டு வெளியில் கறையான் எடுத்த
பழைய புற்று எழுந்து நிற்பதைப் பார்த்திருப்பீர்கள். தேனீக்கள்
கட்டிவைத்த அறுகோண அறைகள் கொண்ட தேன் மெழுகுக் கூட்டைப்
பார்த்திருப்பீர்கள். சிலந்தி பின்னிய சிக்கலான வலையையும்
பார்த்திருப்பீர்கள். இவற்றுள் ஒன்றைக்கூட யாராகினும் ஒருவர்
செய்துகாட்ட முடியுமா? எதையும் செய்து முடிக்கக்கூடிய ஆற்றல் பெற்றவன்
நான் என்று எடுத்ததற்கெல்லாம் வீரம் பேசாதீர்கள். ஓவ்வொருவருக்குள்ளும்
ஏதோ ஒரு கெட்டித்தனம் இருக்கத்தான் செய்யும்.

Tuesday, November 4, 2025

Day 2 : Reaching Divine

 Dear கடவுள்,

இதுவும் கடந்து போகும் ...

Let it go...for what is temporary will go ...

Let it go...for what is not understandable will go...

Let it go...for what is not trustworthy will go...

Let it go...for what cannot be proven will go...


நரைமரண மூப்பறியா நல்லஉடம் பினரே

நற்குலத்தார் எனஅறியீர் நானிலத்தீர் நீவிர்
வரையில்உயர் குலம்என்றும் தாழ்ந்தகுலம் என்றும்
வகுக்கின்றீர் இருகுலமும் மாண்டிடக்காண் கின்றீர்
புரையுறுநும் குலங்கள்எலாம் புழுக்குலம்என் றறிந்தே
புத்தமுதம் உண்டோங்கும் புனிதகுலம் பெறவே
உரைபெறும்என் தனித்தந்தை வருகின்ற தருணம்
உற்றதிவண் உற்றிடுவீர் உண்மைஉரைத் தேனே.


let it come.. புனிதகுலம் பண்புகள் 



நிராசை
சாந்தம் 
நெறிபெறும் உதாரகுணம் 
மருள் நீக்கும் அறிவு 
நிராங்காரம் 
சுத்தமுறு மனம் 

 

Day 1: Reaching Divine

புனித குலம் பெறுமாறு புகலல்

 காடுவெட்டி நிலந்திருத்திக் காட்டெருவும் போட்டுக்

கரும்பைவிட்டுக் கடுவிரைத்துக் களிக்கின்ற உலகீர்
கூடுவிட்டுப் போயினபின் எதுபுரிவீர் எங்கே
குடியிருப்பீர் ஐயோநீர் குறித்தறியீர் இங்கே
பாடுபட்டீர் பயன்அறியீர் பாழ்க்கிறைத்துக் கழித்தீர்
பட்டதெலாம் போதும்இது பரமர்வரு தருணம்
ஈடுகட்டி வருவீரேல் இன்பம்மிகப் பெறுவீர்
எண்மைஉரைத் தேன்அலன்நான் உண்மையுரைத் தேனே




 



Friday, October 10, 2025

 

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும். 605
கெடுநீரார் காமக் கலன். 


சோம்பல், எதையும் தாமதமாகவே செய்தல், மறதி, தூக்கம் என்னும் நான்கும், தாம் அழிந்துவிடக் கருதும் தன்மை கொண்டவர்கள், விரும்பி ஏறும் கப்பல்களாம்







For Parthiban, (chella Kutty. poi padi. pleasse)
by Loving Mom - 07/10/2025






Monday, February 7, 2022

சக்தி அம்சங்கள்

சக்தி அம்சங்கள்     

As quoted in திருமந்திரம் 

திரிபுரை சுந்தரி அந்தரி சிந்துரப்
பரிபுரை நாரணி யாம்பல வன்னத்தி
இருள்புரை ஈசி மனோன்மனி என்ன
வருபல வாய்நிற்கும் மாமது தானே.


                                                                ஆதி பராசக்தி 


                                                                            திரிபுரை


சுந்தரி 



அந்தரி
சிந்தூரி 
பரிபுரை
நாரணி



பலவண்ணத்தி    



ஈஹீ (ஈஸ்வரி )

                                                                                மனோன்மணி 


Friday, June 28, 2019

You are my one and only All - Delight of Existence






त्वमेव माता  पिता त्वमेव ।

त्वमेव बन्धुश्च सखा त्वमेव ।

त्वमेव विद्या द्रविणम् त्वमेव ।
त्वमेव सर्वम् मम देव देव ॥












Meaning:
1: You Truly are my Mother And You Truly are my Father .
2: You Truly are my Relative And You Truly are my Friend.
3: You Truly are my Knowledge and You Truly are my Wealth.
4: You Truly are my AllMy God of Gods.

Monday, January 21, 2019

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க ! what are those 16 blessings?


அம்மா அபிராமி ! பதினாறு  இக சுகம் அருள்வாயே !



கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்கபடு வாராத நட்பும் கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணியிலாத உடலும் சலியாத மனமும் அன்பகலாத மனைவியும் தவறாத சந்தானமும் தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும் தொலையாத நிதியமும் கோணாத கோலு மொருதுன்பமில்லாத வாழ்வும் துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரியதொண்டரொடு கூட்டு கண்டாய் அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையேஆதிகடவூரின் வாழ்வே!அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி! அபிராமியே! 

_அபிராமி பட்டர்

பொருள்
பாற்கடலில் உணர்நிலை உறக்கம் கொள்ளும் திருமாலின் தங்கையாய் ஆதி கடவூரில் திருக் கோவில் கொண்டு, வாழ்வின் அமுதமாய், தொண்டருக்கெல்லாம் தொண்டராய் விளங்கும் ஈசனின் ஒரு பாதி மேனி கொண்ட அபிராமித் தாயே!

அபிராம பட்டர் இந்த பதினாறு பேறுகள் கிடைக்க அன்னை அபிராமியிடம் வேண்டிக்கொள்கிறார்.

1) என்றும் நீங்காத கல்வி, 
2) நீண்ட ஆயுள்,
3) கள்ளம் இல்லாத நட்பு, 
4) என்றும் குறையாச் செல்வம்,
5) எப்போதும் இளமை, 
6) பிணி இல்லாத ஆரோக்கியமான உடல்,
7) முயற்சிகளைக் கைவிடாத மனோபலம், (சலிப்பு வராத மனம்), 
8) அன்பு நீங்காத மனைவி, 
9) புத்திர பாக்கியம்,
10) குறையாத புகழ்,
11) சொன்ன சொல் தவறாமல் இருப்பதற்கான குணம், 
12) எந்தத் தடையும் ஏற்படாத கொடை
13) என்றும் குன்றாச் செல்வச் செழிப்பு, 
14)செங்கோல் வளையாமல் பரிபாலிக்கும் அரசன்,
15) துன்பமில்லாத வாழ்வு, 
16) உன் பாதத்தின்மேல் பக்தி, 
இவையனைத்தும் என்றென்றும் நீ அருள்வாய் தாயே !