Tuesday, March 17, 2026

Reaching Divine Day 7


என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.


அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும் அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும்

                                                                         ஔவிய மாதியோ ராறுந் தவிர்த்தபேர்                                                        
                                                                        அவ்வியல் வழுத்து மருட்பெருஞ் ஜோதி                                                      


ஒளவிய மாதியோ ராறுந் தவிர்த்தபேர்
அவ்வியல் வழுத்து மருட்பெருஞ் ஜோதி – 26

ஒளவியம் முதற்கொண்டு மற்ற ஆறு குணங்களையும் தவிர்க்க வேண்டும்.

ஒளவியம்: ஒளவியம் என்றால் பொறாமை. என்னால் முடியாததை அவன் செய்துவிட்டானே! என்கின்ற ஏக்கமானது நம்மை தீயவழியில் செல்ல வற்புறுத்தும். காரிய சித்தி பெற்றவனை எண்ணும்போதெல்லாம், அவன் மீது நமது எண்ணம் தாக்குதல் நடத்தும். அந்த எண்ணமே நம்மை அவனுக்கு எதிராக தீய வழியில் செல்ல வழிவகுக்கும். எனவே ஒருவரை பார்த்து பொறாமை அடைதலை தவிர்க்க வேண்டும்.
பற்று, வஞ்சகம், ஈயாமை, பேராசை, மதியாமை, சகியாமை இவைகளே கீழ்த்தரமான ஆறு குணங்கள் ஆகும். இவைகளை முறையே 
  •  காமம், 
    • செல்வம், பொருள், தாய், தந்தை, மனைவி, கணவன், மகன், மகள், சகோதரன், சகோதரி இவர்களின் பால் அதீத பற்று வைத்து அதன் மயமாய் ஆவது காமம் எனப்படும். இப்படிப்பட்ட காமமும் நமக்கு தீமையே தரும். எனவே இவற்றின்பால் அவா மயமாய் இருக்கலாம். சன்மார்க்கத்தில் அவாவும் கூடாது.
  • குரோதம், 
    • ஒருவருக்கு கெடுதி விளைவிக்க எண்ணம் கொள்வது குரோதம் ஆகும். கெடுவான் கேடு நினைப்பான் எனவே நாம் ஒருவருக்கு கெடுதி செய்தால், அக்கெடுதியால் பாதிக்கப்படுவது நாம்தான். எனவே குரோதம் தவிர்க்கப்படவேண்டும்.
  • லோபம், 
    • தனது சம்பாத்தியத்திலிருந்து ஞானிகளுக்கு கூட சிறிதேனும் கொடுக்கக்கூடாது என்னும் எண்ணம் கொள்ளுதல் லோபம் எனப்படும். பொருள் சேர்க்க வேண்டும் என்கின்ற அதீத எண்ணம் இருப்பவனால் பிறருக்கு தருமம் தானம் செய்ய இயலாது. அப்பொருளால் பிறருக்கும் பயனில்லை, அவனுக்கும் பயனில்லாது போய்விடும். எனவே லோபம் கூடாது. ‘எட்டி பழுத்தென்ன? ஈயாதான் வாழ்ந்தென்ன?
  • மோகம், 
    • தனக்கு இருக்கும் பொருள் போதாதென்று இன்னும் கொஞ்சம் அதிகமாய் சம்பாதிக்க வேண்டும் என்னும் எண்ணம் கொண்டு செயல்படுதல் மோகம் எனப்படும். பார்க்கும் பொருள்களை எல்லாம் தன்வசப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற மோகத்தால் விளைவது தீய செயல்களே. அதனால் மோகத்திலிருந்து விடுபடவேண்டும்.
  • மதம், 
    • பணம் பொருள் ஆகியவைகளை அதிகம் சேர்த்துக்கொண்டு, அதனால் வருகின்ற அகங்காரத்தால் மற்றவர்களை அலட்சியப்படுத்தி பேசும் குணத்தை மதம் என்கிறோம். பிறரை மதியாமல் மதம் கொண்டு நடந்தால் அழிவு அவனை தேடி வருகின்றது எனப்பொருள். எனவே மதத்தை தவிர்க்க வேண்டும்.
  • மாச்சர்யம்

Monday, February 16, 2026

Reaching Divine Day 6


அருள்விளக்க மாலை


கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக்
கூட்டமும்அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்
கள்ளமுறும் அக்கலைகள் காட்டியபல் கதியும்
காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்
பிள்ளைவிளை யாட்டெனநன் கறிவித்திங் கெனையே
பிள்ளைஎனக் கொண்டுபிள்ளைப் பெயரிட்ட பதியே
தள்ளரிய மெய்யடியார் போற்றமணி மன்றில்
தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.

Wednesday, February 11, 2026

Reaching Divine Day 5



இன்னும் பற்பல நாளிருந் தாலும்
இக்க ணந்தனி லேஇறந் தாலும்
துன்னும் வான்கதிக் கேபுகுந் தாலும்
சோர்ந்து மாநர கத்துழன் றாலும்
என்ன மேலும்இங் கெனக்குவந் தாலும்
எம்பி ரான்எனக்கு யாதுசெய் தாலும்
நன்னர் நெஞ்சகம் நாடிநின் றோங்கும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே.

Tuesday, January 6, 2026

Reaching Divine - DAY 4 - தர்மம் is a virtue

                                                     திருக்குறள்

                (அதிகாரம்:அறன் வலியுறுத்தல் குறள் எண்:33)

 ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

  செல்லும்வாய் எல்லாம் செயல்

ஒல்லும் வகையான் - தத்தமக்கு இயலுந்திறத்தான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாம் செயல் - அறம் ஆகிய நல்வினையை ஒழியாதே அஃது எய்தும் இடத்தான் எல்லாம் செய்க.

(இயலுந்திறம் ஆவது - இல்லறம் பொருள் அளவிற்கு ஏற்பவும், துறவறம் யாக்கை நிலைக்கு ஏற்பவும் செய்தல், ஓவாமை, இடைவிடாமை, எய்தும் இடம் ஆவன மனம் வாக்குக் காயம் என்பன. அவற்றால் செய்யும் அறங்கள் ஆவன முறையே நற்சிந்தையும் நற்சொல்லும் நற்செயலும் என இவை. இதனான் அறஞ்செய்யும் ஆறு கூறப்பட்டது.)

முடிந்த வகைகளில் எல்லாம், சமயம் நேர்ந்தபோதெல்லாம் அறச் செயல்களை இடைவிடாது தொடர்ந்து செய்து வர வேண்டும்.


Monday, December 15, 2025

ஓவ்வொருவருக்குள்ளும் ஏதோ ஒரு கெட்டித்தனம் இருக்கத்தான் செய்யும்.



 வான்குருவியின் கூடு வல்லரக்குத் தொல்கரையான்

தேன்சிலம்பி யாவருக்கும் செய்யரிதால் - யான்பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது



வான்குருவியின் கூடு 



வல்லரக்கு


தொல்கரையான்



தேன்



சிலம்பி



தூக்கணாங் குருவியின் கூடும், உறுதியான அரக்கும், பழமை கொண்ட கரையான் புற்றும், தேன்கூடும், சிலந்தியின் வலையும் நம்மில் யாவருக்கும் செய்வதற்கு அரிதானவையாகும். அதனால் யாம் பெரிதும் வல்லமை உடையோம் என்று எவரும் தற்பெருமை பேசுதல் வேண்டாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று எளிதானது என்று அறிவீர்களாக” என்பது பொருள்.



தூக்கணாங் குருவிக்கூடு மரத்தில் தொங்கும்போது பார்த்திருப்பீர்கள்.
மரக்கொம்பில் அரக்குப் பூச்சிகள் கொம்பரக்கு என்னும் மெழுகு செய்து
வைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். காட்டு வெளியில் கறையான் எடுத்த
பழைய புற்று எழுந்து நிற்பதைப் பார்த்திருப்பீர்கள். தேனீக்கள்
கட்டிவைத்த அறுகோண அறைகள் கொண்ட தேன் மெழுகுக் கூட்டைப்
பார்த்திருப்பீர்கள். சிலந்தி பின்னிய சிக்கலான வலையையும்
பார்த்திருப்பீர்கள். இவற்றுள் ஒன்றைக்கூட யாராகினும் ஒருவர்
செய்துகாட்ட முடியுமா? எதையும் செய்து முடிக்கக்கூடிய ஆற்றல் பெற்றவன்
நான் என்று எடுத்ததற்கெல்லாம் வீரம் பேசாதீர்கள். ஓவ்வொருவருக்குள்ளும்
ஏதோ ஒரு கெட்டித்தனம் இருக்கத்தான் செய்யும்.

Tuesday, November 4, 2025

Day 2 : Reaching Divine

 Dear கடவுள்,

இதுவும் கடந்து போகும் ...

Let it go...for what is temporary will go ...

Let it go...for what is not understandable will go...

Let it go...for what is not trustworthy will go...

Let it go...for what cannot be proven will go...


நரைமரண மூப்பறியா நல்லஉடம் பினரே

நற்குலத்தார் எனஅறியீர் நானிலத்தீர் நீவிர்
வரையில்உயர் குலம்என்றும் தாழ்ந்தகுலம் என்றும்
வகுக்கின்றீர் இருகுலமும் மாண்டிடக்காண் கின்றீர்
புரையுறுநும் குலங்கள்எலாம் புழுக்குலம்என் றறிந்தே
புத்தமுதம் உண்டோங்கும் புனிதகுலம் பெறவே
உரைபெறும்என் தனித்தந்தை வருகின்ற தருணம்
உற்றதிவண் உற்றிடுவீர் உண்மைஉரைத் தேனே.


let it come.. புனிதகுலம் பண்புகள் 



நிராசை
சாந்தம் 
நெறிபெறும் உதாரகுணம் 
மருள் நீக்கும் அறிவு 
நிராங்காரம் 
சுத்தமுறு மனம் 

 

Day 1: Reaching Divine

புனித குலம் பெறுமாறு புகலல்

 காடுவெட்டி நிலந்திருத்திக் காட்டெருவும் போட்டுக்

கரும்பைவிட்டுக் கடுவிரைத்துக் களிக்கின்ற உலகீர்
கூடுவிட்டுப் போயினபின் எதுபுரிவீர் எங்கே
குடியிருப்பீர் ஐயோநீர் குறித்தறியீர் இங்கே
பாடுபட்டீர் பயன்அறியீர் பாழ்க்கிறைத்துக் கழித்தீர்
பட்டதெலாம் போதும்இது பரமர்வரு தருணம்
ஈடுகட்டி வருவீரேல் இன்பம்மிகப் பெறுவீர்
எண்மைஉரைத் தேன்அலன்நான் உண்மையுரைத் தேனே