Wednesday, May 27, 2026

மரத்தை மறைத்தது மாமத யானை - Reaching Divine Day 12



 மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தின் மறைந்தது மாமத யானை

பரத்தை மறைத்தது பார்முதற் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதற் பூவே.1


  • மரம் மற்றும் யானை (உவமை): மரத்தில் செய்யப்பட்ட ஒரு யானை பொம்மையைக் குழந்தை பார்க்கும்போது, அதற்கு உருவம் (யானை) மட்டுமே தெரிகிறது, செய்யப்பட்ட பொருள் (மரம்) மறைந்துவிடுகிறது. அதே பொம்மையை ஒரு தச்சன் பார்க்கும்போது, மூலப்பொருளான 'மரம்' மட்டுமே தெரிகிறது, உருவம் மறைந்துவிடுகிறது.
  • இறைவன் மற்றும் உலகம் (தத்துவம்): சாதாரண மனிதர்களுக்கு இந்த உலகத்தின் தோற்றமும், பஞ்சபூதங்களும் (பார் முதல் பூதம்) மட்டுமே தெரிகின்றன; அதற்குக் காரணமான பரம்பொருள் (இறைவன்) மறைந்துவிடுகிறது. ஆனால், ஞானிகளுக்கு இந்த உலகம் முழுவதும் இறைவனின் (பரம்) வடிவமாகவே தெரிகிறது. 
  • Thursday, April 16, 2026

    You are my sunshine, my only sunshine



    You are my sunshine, my only sunshine
    You make me happy when skies are gray
    You'll never know, dear, how much I love you
    Please don't take my sunshine away





    Wednesday, April 1, 2026

    மெய்த்துணையே Reaching Divine Day 11

     

    • 3. பற்றயர்ந் தஞ்சிய பரிவுகண் டணைந்தெனைச்
      சற்றுமஞ் சேலெனத் தாங்கிய துணையே
    • 584. தளர்ந்தவத் தருணமென் றளர்வெலாந் தவிர்த்துட்
      கிளர்ந்திட வெனக்குக் கிடைத்தமெய்த் துணையே
    • 585. துறையிது வழியிது துணிவிது நீசெயும்
      முறையிது வெனவே மொழிந்தமெய்த் துணையே
    • 586. எங்குறு தீமையு மெனைத்தொட ராவகை
      கங்குலும் பகலுமெய்க் காவல்செய் துணையே
    • 587. வேண்டிய வேண்டிய விருப்பெலா மெனக்கே
      யீண்டிருந் தருள்புரி யென்னுயிர்த் துணையே
    • 588. இகத்தினும் பரத்தினு மெனக்கிடர் சாரா
      தகத்தினும் புறத்தினு மமர்ந்தமெய்த் துணையே

    Monday, March 30, 2026

    Reaching divine Day 10

    நடராஜபதி மாலை


     சாகாத கல்வியே கல்விஒன் றேசிவம்

    தான்என அறிந்தஅறிவே
    தகும்அறிவு மலம்ஐந்தும் வென்றவல் லபமே
    தனித்தபூ ரணவல்லபம்
    வேகாத காலாதி கண்டுகொண் டெப்பொருளும்
    விளையவிளை வித்ததொழிலே
    மெய்த்தொழில தாகும்இந் நான்கையும் ஒருங்கே
    வியந்தடைந் துலகம்எல்லாம்
    மாகாத லுறஎலாம் வல்லசித் தாகிநிறை
    வானவர மேஇன்பமாம்
    மன்னும்இது நீபெற்ற சுத்தசன் மார்க்கத்தின்
    மரபென் றுரைத்தகுருவே
    தேகாதி மூன்றும்நான் தருமுன்அருள் செய்தெனைத்
    தேற்றிஅருள் செய்தசிவமே
    சிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளே
    தெய்வநட ராஜபதியே.

    Saturday, March 28, 2026

    Reaching divine Day 8

    அடிமைப் பேறு


    தானே அருள்ஆனான் தானே பொருள்ஆனான்தானேஎல் லாம்வல்ல தான்ஆனான் - தானேதான்
    நான்ஆனான் என்னுடைய நாயகன்ஆ னான்ஞான
    வான்ஆனான் அம்பலத்தெம் மான்.


    https://www.youtube.com/watch?v=7M7wJQuhGpY

    Tuesday, March 17, 2026

    Reaching Divine Day 7


    என்பி லதனை வெயில்போலக் காயுமே
    அன்பி லதனை அறம்.


    அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும் அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும்

                                                                             ஔவிய மாதியோ ராறுந் தவிர்த்தபேர்                                                        
                                                                            அவ்வியல் வழுத்து மருட்பெருஞ் ஜோதி                                                      


    ஒளவிய மாதியோ ராறுந் தவிர்த்தபேர்
    அவ்வியல் வழுத்து மருட்பெருஞ் ஜோதி – 26

    ஒளவியம் முதற்கொண்டு மற்ற ஆறு குணங்களையும் தவிர்க்க வேண்டும்.

    ஒளவியம்: ஒளவியம் என்றால் பொறாமை. என்னால் முடியாததை அவன் செய்துவிட்டானே! என்கின்ற ஏக்கமானது நம்மை தீயவழியில் செல்ல வற்புறுத்தும். காரிய சித்தி பெற்றவனை எண்ணும்போதெல்லாம், அவன் மீது நமது எண்ணம் தாக்குதல் நடத்தும். அந்த எண்ணமே நம்மை அவனுக்கு எதிராக தீய வழியில் செல்ல வழிவகுக்கும். எனவே ஒருவரை பார்த்து பொறாமை அடைதலை தவிர்க்க வேண்டும்.
    பற்று, வஞ்சகம், ஈயாமை, பேராசை, மதியாமை, சகியாமை இவைகளே கீழ்த்தரமான ஆறு குணங்கள் ஆகும். இவைகளை முறையே 
    •  காமம், 
      • செல்வம், பொருள், தாய், தந்தை, மனைவி, கணவன், மகன், மகள், சகோதரன், சகோதரி இவர்களின் பால் அதீத பற்று வைத்து அதன் மயமாய் ஆவது காமம் எனப்படும். இப்படிப்பட்ட காமமும் நமக்கு தீமையே தரும். எனவே இவற்றின்பால் அவா மயமாய் இருக்கலாம். சன்மார்க்கத்தில் அவாவும் கூடாது.
    • குரோதம், 
      • ஒருவருக்கு கெடுதி விளைவிக்க எண்ணம் கொள்வது குரோதம் ஆகும். கெடுவான் கேடு நினைப்பான் எனவே நாம் ஒருவருக்கு கெடுதி செய்தால், அக்கெடுதியால் பாதிக்கப்படுவது நாம்தான். எனவே குரோதம் தவிர்க்கப்படவேண்டும்.
    • லோபம், 
      • தனது சம்பாத்தியத்திலிருந்து ஞானிகளுக்கு கூட சிறிதேனும் கொடுக்கக்கூடாது என்னும் எண்ணம் கொள்ளுதல் லோபம் எனப்படும். பொருள் சேர்க்க வேண்டும் என்கின்ற அதீத எண்ணம் இருப்பவனால் பிறருக்கு தருமம் தானம் செய்ய இயலாது. அப்பொருளால் பிறருக்கும் பயனில்லை, அவனுக்கும் பயனில்லாது போய்விடும். எனவே லோபம் கூடாது. ‘எட்டி பழுத்தென்ன? ஈயாதான் வாழ்ந்தென்ன?
    • மோகம், 
      • தனக்கு இருக்கும் பொருள் போதாதென்று இன்னும் கொஞ்சம் அதிகமாய் சம்பாதிக்க வேண்டும் என்னும் எண்ணம் கொண்டு செயல்படுதல் மோகம் எனப்படும். பார்க்கும் பொருள்களை எல்லாம் தன்வசப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற மோகத்தால் விளைவது தீய செயல்களே. அதனால் மோகத்திலிருந்து விடுபடவேண்டும்.
    • மதம், 
      • பணம் பொருள் ஆகியவைகளை அதிகம் சேர்த்துக்கொண்டு, அதனால் வருகின்ற அகங்காரத்தால் மற்றவர்களை அலட்சியப்படுத்தி பேசும் குணத்தை மதம் என்கிறோம். பிறரை மதியாமல் மதம் கொண்டு நடந்தால் அழிவு அவனை தேடி வருகின்றது எனப்பொருள். எனவே மதத்தை தவிர்க்க வேண்டும்.
    • மாச்சர்யம்

    Monday, February 16, 2026

    Reaching Divine Day 6


    அருள்விளக்க மாலை


    கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக்
    கூட்டமும்அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்
    கள்ளமுறும் அக்கலைகள் காட்டியபல் கதியும்
    காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்
    பிள்ளைவிளை யாட்டெனநன் கறிவித்திங் கெனையே
    பிள்ளைஎனக் கொண்டுபிள்ளைப் பெயரிட்ட பதியே
    தள்ளரிய மெய்யடியார் போற்றமணி மன்றில்
    தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.