Wednesday, July 8, 2026

Reaching Divine Day 14 - கையில் பொருள் இருக்கும்போதே அறம் செய்ய வேண்டும். (நாலடியார் )

                        நாலடியார்



மற்றறிவாம் நல்வினை யாமிளையம் என்னாது
கைத்துண்டாம் போழ்தே கரவா தறஞ்செய்ம்மின்
முற்றி இருந்த கனியொழியத் தீவளியால்
நற்காய் உதிர்தலும் உண்டு!        19






பின்னர் பார்த்துக்கொள்ளலாம்.
இப்போது நான் இளையவனாக இருக்கிறேன்
என்று எண்ணாமல்
அறம் செய்ய வேண்டும்.


கையில் பொருள் இருக்கும்போதே
அறம் செய்ய வேண்டும்.


புயல் காற்று அடிக்கும்போது
முற்றிய பழங்கள் உதிரும்போது
காய்களும் உதிர்வது உண்டு.


அதுபோல் இளமையிலும் இறப்பு நேரலாம்.


                அறன் வலியுறுத்தல்

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.


இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.

Reaching Divine Day 13 - தீமை செய்தவரும் வெட்கப்பட நன்மை செய்து விடு (மூதுரை)

மூதுரை

 

வெண்பா : 30

சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம்அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் – மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம்.

விளக்கம்
தன்னை வெட்டுபவனுக்கும் நிழலைத் தந்து காக்கும் மரத்தைப் போல, அறிவுடையார் அவர்தம் உயிருக்கே தீங்கு செய்பவனையும் இயன்ற வரைக் காக்கவே செய்வர்.




இன்னா செய்யாமை



இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.

இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும். (௩௱௰௪)
— மு. வரதராசன்

Wednesday, May 27, 2026

மரத்தை மறைத்தது மாமத யானை - Reaching Divine Day 12



 மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தின் மறைந்தது மாமத யானை

பரத்தை மறைத்தது பார்முதற் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதற் பூவே.1


  • மரம் மற்றும் யானை (உவமை): மரத்தில் செய்யப்பட்ட ஒரு யானை பொம்மையைக் குழந்தை பார்க்கும்போது, அதற்கு உருவம் (யானை) மட்டுமே தெரிகிறது, செய்யப்பட்ட பொருள் (மரம்) மறைந்துவிடுகிறது. அதே பொம்மையை ஒரு தச்சன் பார்க்கும்போது, மூலப்பொருளான 'மரம்' மட்டுமே தெரிகிறது, உருவம் மறைந்துவிடுகிறது.
  • இறைவன் மற்றும் உலகம் (தத்துவம்): சாதாரண மனிதர்களுக்கு இந்த உலகத்தின் தோற்றமும், பஞ்சபூதங்களும் (பார் முதல் பூதம்) மட்டுமே தெரிகின்றன; அதற்குக் காரணமான பரம்பொருள் (இறைவன்) மறைந்துவிடுகிறது. ஆனால், ஞானிகளுக்கு இந்த உலகம் முழுவதும் இறைவனின் (பரம்) வடிவமாகவே தெரிகிறது. 
  • Thursday, April 16, 2026

    You are my sunshine, my only sunshine



    You are my sunshine, my only sunshine
    You make me happy when skies are gray
    You'll never know, dear, how much I love you
    Please don't take my sunshine away





    Wednesday, April 1, 2026

    மெய்த்துணையே Reaching Divine Day 11

     

    • 3. பற்றயர்ந் தஞ்சிய பரிவுகண் டணைந்தெனைச்
      சற்றுமஞ் சேலெனத் தாங்கிய துணையே
    • 584. தளர்ந்தவத் தருணமென் றளர்வெலாந் தவிர்த்துட்
      கிளர்ந்திட வெனக்குக் கிடைத்தமெய்த் துணையே
    • 585. துறையிது வழியிது துணிவிது நீசெயும்
      முறையிது வெனவே மொழிந்தமெய்த் துணையே
    • 586. எங்குறு தீமையு மெனைத்தொட ராவகை
      கங்குலும் பகலுமெய்க் காவல்செய் துணையே
    • 587. வேண்டிய வேண்டிய விருப்பெலா மெனக்கே
      யீண்டிருந் தருள்புரி யென்னுயிர்த் துணையே
    • 588. இகத்தினும் பரத்தினு மெனக்கிடர் சாரா
      தகத்தினும் புறத்தினு மமர்ந்தமெய்த் துணையே

    Monday, March 30, 2026

    Reaching divine Day 10

    நடராஜபதி மாலை


     சாகாத கல்வியே கல்விஒன் றேசிவம்

    தான்என அறிந்தஅறிவே
    தகும்அறிவு மலம்ஐந்தும் வென்றவல் லபமே
    தனித்தபூ ரணவல்லபம்
    வேகாத காலாதி கண்டுகொண் டெப்பொருளும்
    விளையவிளை வித்ததொழிலே
    மெய்த்தொழில தாகும்இந் நான்கையும் ஒருங்கே
    வியந்தடைந் துலகம்எல்லாம்
    மாகாத லுறஎலாம் வல்லசித் தாகிநிறை
    வானவர மேஇன்பமாம்
    மன்னும்இது நீபெற்ற சுத்தசன் மார்க்கத்தின்
    மரபென் றுரைத்தகுருவே
    தேகாதி மூன்றும்நான் தருமுன்அருள் செய்தெனைத்
    தேற்றிஅருள் செய்தசிவமே
    சிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளே
    தெய்வநட ராஜபதியே.

    Saturday, March 28, 2026

    Reaching divine Day 8

    அடிமைப் பேறு


    தானே அருள்ஆனான் தானே பொருள்ஆனான்தானேஎல் லாம்வல்ல தான்ஆனான் - தானேதான்
    நான்ஆனான் என்னுடைய நாயகன்ஆ னான்ஞான
    வான்ஆனான் அம்பலத்தெம் மான்.


    https://www.youtube.com/watch?v=7M7wJQuhGpY