Friday, July 24, 2026

பெரியோரின் நட்பை கைவிடுவதால் கிடைக்கும் பலன்



திருக்குறள் 
பெரியாரைத் துணைக்கோடல்
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்





  • அறிவுடையார் நட்பு: அறத்தின் நுட்பமான வழிகளை உணர்ந்து, தம்மைவிட வயது மற்றும் அறிவால் முதிர்ந்த பெரியவர்களின் நட்பைத் தேடிப் பெற வேண்டும். 
  • துன்பம் காத்தல்: தமக்கு வரும் துன்பங்களை முன்கூட்டியே அறிந்து அதனைப் போக்கி, மேலும் துன்பம் வராமல் காப்பவர்களைப் போற்றித் துணையாகக் கொள்ள வேண்டும். 
  • பெருஞ்செல்வம்: அறிவு மற்றும் ஆற்றலில் தம்மைக் காட்டிலும் சிறந்த பெரியவர்களைத் தமது உறவாக (துணையாக)க் கொண்டு நடப்பதே, ஒருவருக்கான மிகச்சிறந்த பலமாகும். 
  • இடித்துரைப்பவர்: தவறு நேரும்போது அதனை வெளிப்படையாகச் சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்துபவர்களைத் துணையாகக் கொண்டவர்களை யாராலும் அழிக்க முடியாது.

  •                                                 இன்னா நாற்பது
    பெரியாரோ டியாத்த தொடர்விடுத லின்னா
    அரியவை செய்து மெனவுரைத்த லின்னா
    பரியார்க்குத் தாமுற்ற கூற்றின்னா வின்னா
    பெரியோர்க்குத் தீய செயல். . . . .[26]

    விளக்கம்:

    பெரியவருடன் கொண்ட நட்பினை விடுதல் துன்பமாம். செய்தற்கரிய காரியங்களைச் செய்வோம் என்று கூறுவது துன்பமாம். அன்பு கொள்ளாதவர்களுக்குத் தாம் அடைந்த துன்பங்களைச் சொல்வது துன்பமாகும். பெருமையுடையவர்களுக்குத் தீயவற்றைச் செய்தல் துன்பமாகும்.

    Thursday, July 23, 2026

    குமணவள்ளல் - புலவருக்காக தலை கொடுத்த வள்ளல்

                                        திருக்குறள்

    வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
    பண்பில் தலைப்பிரிதல் இன்று. (குடிமை - 955)



    தொன்றுதொட்டே வருகின்ற பழங்குடியிலே பிறந்தவர்கள், தாம் கொடுத்து உதவும் பொருள் சுருங்கிய போதும், தம் பண்பிலே குறைய மாட்டார்கள்


    நல்வழி

    வெண்பா : 9
    ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வா
    ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு
    நல்ல குடிபிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
    இல்லை என மாட்டார் இசைந்து

    விளக்கம்
    கால் சுடும் அளவிற்கு நீர் வற்றி போய் வெரும் மணலாக ஆறு வற்றி போனாலும், அதை தோண்டுவோருக்கு, ஊற்று நீர் கொடுத்து இந்த உலகதிற்கு உதவும் நதியைப் போலே நல்ல மனம் படைத்தோர், நல்ல காரியங்கள் செய்யும் நல்ல குடியில் பிறந்தோர் தங்களுக்கு இல்லையென்றாலும் அடுத்தவர் கேட்கும் பொது தங்களிடம் உள்ள பொருளையும் கொடுத்து உதவுவார்கள்.

    Wednesday, July 8, 2026

    Reaching Divine Day 14 - கையில் பொருள் இருக்கும்போதே அறம் செய்ய வேண்டும். (நாலடியார் )

                            நாலடியார்



    மற்றறிவாம் நல்வினை யாமிளையம் என்னாது
    கைத்துண்டாம் போழ்தே கரவா தறஞ்செய்ம்மின்
    முற்றி இருந்த கனியொழியத் தீவளியால்
    நற்காய் உதிர்தலும் உண்டு!        19






    பின்னர் பார்த்துக்கொள்ளலாம்.
    இப்போது நான் இளையவனாக இருக்கிறேன்
    என்று எண்ணாமல்
    அறம் செய்ய வேண்டும்.


    கையில் பொருள் இருக்கும்போதே
    அறம் செய்ய வேண்டும்.


    புயல் காற்று அடிக்கும்போது
    முற்றிய பழங்கள் உதிரும்போது
    காய்களும் உதிர்வது உண்டு.


    அதுபோல் இளமையிலும் இறப்பு நேரலாம்.


                    அறன் வலியுறுத்தல்

    அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
    பொன்றுங்கால் பொன்றாத் துணை.


    இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.

    Reaching Divine Day 13 - தீமை செய்தவரும் வெட்கப்பட நன்மை செய்து விடு (மூதுரை)

    மூதுரை

     

    வெண்பா : 30

    சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம்அவரை
    ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் – மாந்தர்
    குறைக்கும் தனையும் குளிர்நிழலைத் தந்து
    மறைக்குமாம் கண்டீர் மரம்.

    விளக்கம்
    தன்னை வெட்டுபவனுக்கும் நிழலைத் தந்து காக்கும் மரத்தைப் போல, அறிவுடையார் அவர்தம் உயிருக்கே தீங்கு செய்பவனையும் இயன்ற வரைக் காக்கவே செய்வர்.




    இன்னா செய்யாமை



    இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
    நன்னயஞ் செய்து விடல்.

    இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும். (௩௱௰௪)
    — மு. வரதராசன்