Wednesday, July 8, 2026

Reaching Divine Day 14 - கையில் பொருள் இருக்கும்போதே அறம் செய்ய வேண்டும். (நாலடியார் )

                        நாலடியார்



மற்றறிவாம் நல்வினை யாமிளையம் என்னாது
கைத்துண்டாம் போழ்தே கரவா தறஞ்செய்ம்மின்
முற்றி இருந்த கனியொழியத் தீவளியால்
நற்காய் உதிர்தலும் உண்டு!        19






பின்னர் பார்த்துக்கொள்ளலாம்.
இப்போது நான் இளையவனாக இருக்கிறேன்
என்று எண்ணாமல்
அறம் செய்ய வேண்டும்.


கையில் பொருள் இருக்கும்போதே
அறம் செய்ய வேண்டும்.


புயல் காற்று அடிக்கும்போது
முற்றிய பழங்கள் உதிரும்போது
காய்களும் உதிர்வது உண்டு.


அதுபோல் இளமையிலும் இறப்பு நேரலாம்.


                அறன் வலியுறுத்தல்

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.


இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.

Reaching Divine Day 13 - தீமை செய்தவரும் வெட்கப்பட நன்மை செய்து விடு (மூதுரை)

மூதுரை

 

வெண்பா : 30

சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம்அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் – மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம்.

விளக்கம்
தன்னை வெட்டுபவனுக்கும் நிழலைத் தந்து காக்கும் மரத்தைப் போல, அறிவுடையார் அவர்தம் உயிருக்கே தீங்கு செய்பவனையும் இயன்ற வரைக் காக்கவே செய்வர்.




இன்னா செய்யாமை



இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.

இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும். (௩௱௰௪)
— மு. வரதராசன்