Thursday, April 26, 2018

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் அவை..



                                          நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் அவை 

   

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் -- என்றன்
   முன்னைத் தீயவினைப் பயன்கள் -- இன்னும்
   மூளா தழிந்திடுதல் வேண்டும்-இனி
  என்னைப் புதிய வுயிராக்கி-எனக்
   கேதுங் கவலையறச் செய்து -- மதி
   தன்னை மிகத்தெளிவு செய்து -- என்றும்
  சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்.

Saturday, April 21, 2018

நமசிவாய-துஞ்சலும் துஞ்சல் இல்லாத போழ்தினும்

துஞ்சலும் துஞ்சல் இல்லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின், நாள்தொறும்;
வஞ்சகம் அற்று அடி வாழ்த்த, வந்த கூற்று
அஞ்ச உதைத்தன, அஞ்சு எழுத்துமே.
                                                                                                               தேவாரம்
3.022.திருப்பஞ்சாக்கரப்பதிகம்

பண் – காந்தாரபஞ்சமம்




கருத்து: 

தூங்கும்பொழுதும், விழித்திருக்கும் பொழுதும், மனம் கசிந்து உருக நாள்தோறும் திருஐந்தெழுத்தை நினைத்துப் போற்றுங்கள். பல வழிகளில் திரிந்து செல்லும் தன்மையுடைய மனத்தை அவ்வாறு செல்லவிடாமல் தடுத்து ஒருமுகப்படுத்தி இறைவனையே நினைத்து அவன் திருவடிகளை வாழ்த்திப் போற்றிய மார்க்கண்டேயரின் உயிரை அவருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் இறுதியில் கவர வந்த கூற்றுவனை உதைத்து அழித்தன திருவைந்தெழுத்தே.


                                                                    திருச்சிற்றம்பலம் 

https://www.youtube.com/watch?v=L9jZSQG0vg0