Wednesday, May 27, 2026

மரத்தை மறைத்தது மாமத யானை - Reaching Divine Day 12



 மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தின் மறைந்தது மாமத யானை

பரத்தை மறைத்தது பார்முதற் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதற் பூவே.1


  • மரம் மற்றும் யானை (உவமை): மரத்தில் செய்யப்பட்ட ஒரு யானை பொம்மையைக் குழந்தை பார்க்கும்போது, அதற்கு உருவம் (யானை) மட்டுமே தெரிகிறது, செய்யப்பட்ட பொருள் (மரம்) மறைந்துவிடுகிறது. அதே பொம்மையை ஒரு தச்சன் பார்க்கும்போது, மூலப்பொருளான 'மரம்' மட்டுமே தெரிகிறது, உருவம் மறைந்துவிடுகிறது.
  • இறைவன் மற்றும் உலகம் (தத்துவம்): சாதாரண மனிதர்களுக்கு இந்த உலகத்தின் தோற்றமும், பஞ்சபூதங்களும் (பார் முதல் பூதம்) மட்டுமே தெரிகின்றன; அதற்குக் காரணமான பரம்பொருள் (இறைவன்) மறைந்துவிடுகிறது. ஆனால், ஞானிகளுக்கு இந்த உலகம் முழுவதும் இறைவனின் (பரம்) வடிவமாகவே தெரிகிறது. 
  • Thursday, April 16, 2026

    You are my sunshine, my only sunshine



    You are my sunshine, my only sunshine
    You make me happy when skies are gray
    You'll never know, dear, how much I love you
    Please don't take my sunshine away





    Wednesday, April 1, 2026

    மெய்த்துணையே Reaching Divine Day 11

     

    • 3. பற்றயர்ந் தஞ்சிய பரிவுகண் டணைந்தெனைச்
      சற்றுமஞ் சேலெனத் தாங்கிய துணையே
    • 584. தளர்ந்தவத் தருணமென் றளர்வெலாந் தவிர்த்துட்
      கிளர்ந்திட வெனக்குக் கிடைத்தமெய்த் துணையே
    • 585. துறையிது வழியிது துணிவிது நீசெயும்
      முறையிது வெனவே மொழிந்தமெய்த் துணையே
    • 586. எங்குறு தீமையு மெனைத்தொட ராவகை
      கங்குலும் பகலுமெய்க் காவல்செய் துணையே
    • 587. வேண்டிய வேண்டிய விருப்பெலா மெனக்கே
      யீண்டிருந் தருள்புரி யென்னுயிர்த் துணையே
    • 588. இகத்தினும் பரத்தினு மெனக்கிடர் சாரா
      தகத்தினும் புறத்தினு மமர்ந்தமெய்த் துணையே

    Monday, March 30, 2026

    Reaching divine Day 10

    நடராஜபதி மாலை


     சாகாத கல்வியே கல்விஒன் றேசிவம்

    தான்என அறிந்தஅறிவே
    தகும்அறிவு மலம்ஐந்தும் வென்றவல் லபமே
    தனித்தபூ ரணவல்லபம்
    வேகாத காலாதி கண்டுகொண் டெப்பொருளும்
    விளையவிளை வித்ததொழிலே
    மெய்த்தொழில தாகும்இந் நான்கையும் ஒருங்கே
    வியந்தடைந் துலகம்எல்லாம்
    மாகாத லுறஎலாம் வல்லசித் தாகிநிறை
    வானவர மேஇன்பமாம்
    மன்னும்இது நீபெற்ற சுத்தசன் மார்க்கத்தின்
    மரபென் றுரைத்தகுருவே
    தேகாதி மூன்றும்நான் தருமுன்அருள் செய்தெனைத்
    தேற்றிஅருள் செய்தசிவமே
    சிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளே
    தெய்வநட ராஜபதியே.

    Saturday, March 28, 2026

    Reaching divine Day 8

    அடிமைப் பேறு


    தானே அருள்ஆனான் தானே பொருள்ஆனான்தானேஎல் லாம்வல்ல தான்ஆனான் - தானேதான்
    நான்ஆனான் என்னுடைய நாயகன்ஆ னான்ஞான
    வான்ஆனான் அம்பலத்தெம் மான்.


    https://www.youtube.com/watch?v=7M7wJQuhGpY

    Tuesday, March 17, 2026

    Reaching Divine Day 7


    என்பி லதனை வெயில்போலக் காயுமே
    அன்பி லதனை அறம்.


    அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும் அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும்

                                                                             ஔவிய மாதியோ ராறுந் தவிர்த்தபேர்                                                        
                                                                            அவ்வியல் வழுத்து மருட்பெருஞ் ஜோதி                                                      


    ஒளவிய மாதியோ ராறுந் தவிர்த்தபேர்
    அவ்வியல் வழுத்து மருட்பெருஞ் ஜோதி – 26

    ஒளவியம் முதற்கொண்டு மற்ற ஆறு குணங்களையும் தவிர்க்க வேண்டும்.

    ஒளவியம்: ஒளவியம் என்றால் பொறாமை. என்னால் முடியாததை அவன் செய்துவிட்டானே! என்கின்ற ஏக்கமானது நம்மை தீயவழியில் செல்ல வற்புறுத்தும். காரிய சித்தி பெற்றவனை எண்ணும்போதெல்லாம், அவன் மீது நமது எண்ணம் தாக்குதல் நடத்தும். அந்த எண்ணமே நம்மை அவனுக்கு எதிராக தீய வழியில் செல்ல வழிவகுக்கும். எனவே ஒருவரை பார்த்து பொறாமை அடைதலை தவிர்க்க வேண்டும்.
    பற்று, வஞ்சகம், ஈயாமை, பேராசை, மதியாமை, சகியாமை இவைகளே கீழ்த்தரமான ஆறு குணங்கள் ஆகும். இவைகளை முறையே 
    •  காமம், 
      • செல்வம், பொருள், தாய், தந்தை, மனைவி, கணவன், மகன், மகள், சகோதரன், சகோதரி இவர்களின் பால் அதீத பற்று வைத்து அதன் மயமாய் ஆவது காமம் எனப்படும். இப்படிப்பட்ட காமமும் நமக்கு தீமையே தரும். எனவே இவற்றின்பால் அவா மயமாய் இருக்கலாம். சன்மார்க்கத்தில் அவாவும் கூடாது.
    • குரோதம், 
      • ஒருவருக்கு கெடுதி விளைவிக்க எண்ணம் கொள்வது குரோதம் ஆகும். கெடுவான் கேடு நினைப்பான் எனவே நாம் ஒருவருக்கு கெடுதி செய்தால், அக்கெடுதியால் பாதிக்கப்படுவது நாம்தான். எனவே குரோதம் தவிர்க்கப்படவேண்டும்.
    • லோபம், 
      • தனது சம்பாத்தியத்திலிருந்து ஞானிகளுக்கு கூட சிறிதேனும் கொடுக்கக்கூடாது என்னும் எண்ணம் கொள்ளுதல் லோபம் எனப்படும். பொருள் சேர்க்க வேண்டும் என்கின்ற அதீத எண்ணம் இருப்பவனால் பிறருக்கு தருமம் தானம் செய்ய இயலாது. அப்பொருளால் பிறருக்கும் பயனில்லை, அவனுக்கும் பயனில்லாது போய்விடும். எனவே லோபம் கூடாது. ‘எட்டி பழுத்தென்ன? ஈயாதான் வாழ்ந்தென்ன?
    • மோகம், 
      • தனக்கு இருக்கும் பொருள் போதாதென்று இன்னும் கொஞ்சம் அதிகமாய் சம்பாதிக்க வேண்டும் என்னும் எண்ணம் கொண்டு செயல்படுதல் மோகம் எனப்படும். பார்க்கும் பொருள்களை எல்லாம் தன்வசப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற மோகத்தால் விளைவது தீய செயல்களே. அதனால் மோகத்திலிருந்து விடுபடவேண்டும்.
    • மதம், 
      • பணம் பொருள் ஆகியவைகளை அதிகம் சேர்த்துக்கொண்டு, அதனால் வருகின்ற அகங்காரத்தால் மற்றவர்களை அலட்சியப்படுத்தி பேசும் குணத்தை மதம் என்கிறோம். பிறரை மதியாமல் மதம் கொண்டு நடந்தால் அழிவு அவனை தேடி வருகின்றது எனப்பொருள். எனவே மதத்தை தவிர்க்க வேண்டும்.
    • மாச்சர்யம்

    Monday, February 16, 2026

    Reaching Divine Day 6


    அருள்விளக்க மாலை


    கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக்
    கூட்டமும்அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்
    கள்ளமுறும் அக்கலைகள் காட்டியபல் கதியும்
    காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்
    பிள்ளைவிளை யாட்டெனநன் கறிவித்திங் கெனையே
    பிள்ளைஎனக் கொண்டுபிள்ளைப் பெயரிட்ட பதியே
    தள்ளரிய மெய்யடியார் போற்றமணி மன்றில்
    தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.

    Wednesday, February 11, 2026

    Reaching Divine Day 5



    இன்னும் பற்பல நாளிருந் தாலும்
    இக்க ணந்தனி லேஇறந் தாலும்
    துன்னும் வான்கதிக் கேபுகுந் தாலும்
    சோர்ந்து மாநர கத்துழன் றாலும்
    என்ன மேலும்இங் கெனக்குவந் தாலும்
    எம்பி ரான்எனக்கு யாதுசெய் தாலும்
    நன்னர் நெஞ்சகம் நாடிநின் றோங்கும்
    நமச்சி வாயத்தை நான்மற வேனே.

    Tuesday, January 6, 2026

    Reaching Divine - DAY 4 - தர்மம் is a virtue

                                                         திருக்குறள்

                    (அதிகாரம்:அறன் வலியுறுத்தல் குறள் எண்:33)

     ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

      செல்லும்வாய் எல்லாம் செயல்

    ஒல்லும் வகையான் - தத்தமக்கு இயலுந்திறத்தான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாம் செயல் - அறம் ஆகிய நல்வினையை ஒழியாதே அஃது எய்தும் இடத்தான் எல்லாம் செய்க.

    (இயலுந்திறம் ஆவது - இல்லறம் பொருள் அளவிற்கு ஏற்பவும், துறவறம் யாக்கை நிலைக்கு ஏற்பவும் செய்தல், ஓவாமை, இடைவிடாமை, எய்தும் இடம் ஆவன மனம் வாக்குக் காயம் என்பன. அவற்றால் செய்யும் அறங்கள் ஆவன முறையே நற்சிந்தையும் நற்சொல்லும் நற்செயலும் என இவை. இதனான் அறஞ்செய்யும் ஆறு கூறப்பட்டது.)

    முடிந்த வகைகளில் எல்லாம், சமயம் நேர்ந்தபோதெல்லாம் அறச் செயல்களை இடைவிடாது தொடர்ந்து செய்து வர வேண்டும்.


    Monday, December 15, 2025

    ஓவ்வொருவருக்குள்ளும் ஏதோ ஒரு கெட்டித்தனம் இருக்கத்தான் செய்யும்.



     வான்குருவியின் கூடு வல்லரக்குத் தொல்கரையான்

    தேன்சிலம்பி யாவருக்கும் செய்யரிதால் - யான்பெரிதும்
    வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
    எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது



    வான்குருவியின் கூடு 



    வல்லரக்கு


    தொல்கரையான்



    தேன்



    சிலம்பி



    தூக்கணாங் குருவியின் கூடும், உறுதியான அரக்கும், பழமை கொண்ட கரையான் புற்றும், தேன்கூடும், சிலந்தியின் வலையும் நம்மில் யாவருக்கும் செய்வதற்கு அரிதானவையாகும். அதனால் யாம் பெரிதும் வல்லமை உடையோம் என்று எவரும் தற்பெருமை பேசுதல் வேண்டாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று எளிதானது என்று அறிவீர்களாக” என்பது பொருள்.



    தூக்கணாங் குருவிக்கூடு மரத்தில் தொங்கும்போது பார்த்திருப்பீர்கள்.
    மரக்கொம்பில் அரக்குப் பூச்சிகள் கொம்பரக்கு என்னும் மெழுகு செய்து
    வைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். காட்டு வெளியில் கறையான் எடுத்த
    பழைய புற்று எழுந்து நிற்பதைப் பார்த்திருப்பீர்கள். தேனீக்கள்
    கட்டிவைத்த அறுகோண அறைகள் கொண்ட தேன் மெழுகுக் கூட்டைப்
    பார்த்திருப்பீர்கள். சிலந்தி பின்னிய சிக்கலான வலையையும்
    பார்த்திருப்பீர்கள். இவற்றுள் ஒன்றைக்கூட யாராகினும் ஒருவர்
    செய்துகாட்ட முடியுமா? எதையும் செய்து முடிக்கக்கூடிய ஆற்றல் பெற்றவன்
    நான் என்று எடுத்ததற்கெல்லாம் வீரம் பேசாதீர்கள். ஓவ்வொருவருக்குள்ளும்
    ஏதோ ஒரு கெட்டித்தனம் இருக்கத்தான் செய்யும்.

    Tuesday, November 4, 2025

    Day 2 : Reaching Divine

     Dear கடவுள்,

    இதுவும் கடந்து போகும் ...

    Let it go...for what is temporary will go ...

    Let it go...for what is not understandable will go...

    Let it go...for what is not trustworthy will go...

    Let it go...for what cannot be proven will go...


    நரைமரண மூப்பறியா நல்லஉடம் பினரே

    நற்குலத்தார் எனஅறியீர் நானிலத்தீர் நீவிர்
    வரையில்உயர் குலம்என்றும் தாழ்ந்தகுலம் என்றும்
    வகுக்கின்றீர் இருகுலமும் மாண்டிடக்காண் கின்றீர்
    புரையுறுநும் குலங்கள்எலாம் புழுக்குலம்என் றறிந்தே
    புத்தமுதம் உண்டோங்கும் புனிதகுலம் பெறவே
    உரைபெறும்என் தனித்தந்தை வருகின்ற தருணம்
    உற்றதிவண் உற்றிடுவீர் உண்மைஉரைத் தேனே.


    let it come.. புனிதகுலம் பண்புகள் 



    நிராசை
    சாந்தம் 
    நெறிபெறும் உதாரகுணம் 
    மருள் நீக்கும் அறிவு 
    நிராங்காரம் 
    சுத்தமுறு மனம் 

     

    Day 1: Reaching Divine

    புனித குலம் பெறுமாறு புகலல்

     காடுவெட்டி நிலந்திருத்திக் காட்டெருவும் போட்டுக்

    கரும்பைவிட்டுக் கடுவிரைத்துக் களிக்கின்ற உலகீர்
    கூடுவிட்டுப் போயினபின் எதுபுரிவீர் எங்கே
    குடியிருப்பீர் ஐயோநீர் குறித்தறியீர் இங்கே
    பாடுபட்டீர் பயன்அறியீர் பாழ்க்கிறைத்துக் கழித்தீர்
    பட்டதெலாம் போதும்இது பரமர்வரு தருணம்
    ஈடுகட்டி வருவீரேல் இன்பம்மிகப் பெறுவீர்
    எண்மைஉரைத் தேன்அலன்நான் உண்மையுரைத் தேனே




     



    Friday, October 10, 2025

     

    நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும். 605
    கெடுநீரார் காமக் கலன். 


    சோம்பல், எதையும் தாமதமாகவே செய்தல், மறதி, தூக்கம் என்னும் நான்கும், தாம் அழிந்துவிடக் கருதும் தன்மை கொண்டவர்கள், விரும்பி ஏறும் கப்பல்களாம்







    For Parthiban, (chella Kutty. poi padi. pleasse)
    by Loving Mom - 07/10/2025






    Monday, February 7, 2022

    சக்தி அம்சங்கள்

    சக்தி அம்சங்கள்     

    As quoted in திருமந்திரம் 

    திரிபுரை சுந்தரி அந்தரி சிந்துரப்
    பரிபுரை நாரணி யாம்பல வன்னத்தி
    இருள்புரை ஈசி மனோன்மனி என்ன
    வருபல வாய்நிற்கும் மாமது தானே.


                                                                    ஆதி பராசக்தி 


                                                                                திரிபுரை


    சுந்தரி 



    அந்தரி
    சிந்தூரி 
    பரிபுரை
    நாரணி



    பலவண்ணத்தி    



    ஈஹீ (ஈஸ்வரி )

                                                                                    மனோன்மணி 


    Friday, June 28, 2019

    You are my one and only All - Delight of Existence






    त्वमेव माता  पिता त्वमेव ।

    त्वमेव बन्धुश्च सखा त्वमेव ।

    त्वमेव विद्या द्रविणम् त्वमेव ।
    त्वमेव सर्वम् मम देव देव ॥












    Meaning:
    1: You Truly are my Mother And You Truly are my Father .
    2: You Truly are my Relative And You Truly are my Friend.
    3: You Truly are my Knowledge and You Truly are my Wealth.
    4: You Truly are my AllMy God of Gods.

    Monday, January 21, 2019

    பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க ! what are those 16 blessings?


    அம்மா அபிராமி ! பதினாறு  இக சுகம் அருள்வாயே !



    கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்கபடு வாராத நட்பும் கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணியிலாத உடலும் சலியாத மனமும் அன்பகலாத மனைவியும் தவறாத சந்தானமும் தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும் தொலையாத நிதியமும் கோணாத கோலு மொருதுன்பமில்லாத வாழ்வும் துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரியதொண்டரொடு கூட்டு கண்டாய் அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையேஆதிகடவூரின் வாழ்வே!அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி! அபிராமியே! 

    _அபிராமி பட்டர்

    பொருள்
    பாற்கடலில் உணர்நிலை உறக்கம் கொள்ளும் திருமாலின் தங்கையாய் ஆதி கடவூரில் திருக் கோவில் கொண்டு, வாழ்வின் அமுதமாய், தொண்டருக்கெல்லாம் தொண்டராய் விளங்கும் ஈசனின் ஒரு பாதி மேனி கொண்ட அபிராமித் தாயே!

    அபிராம பட்டர் இந்த பதினாறு பேறுகள் கிடைக்க அன்னை அபிராமியிடம் வேண்டிக்கொள்கிறார்.

    1) என்றும் நீங்காத கல்வி, 
    2) நீண்ட ஆயுள்,
    3) கள்ளம் இல்லாத நட்பு, 
    4) என்றும் குறையாச் செல்வம்,
    5) எப்போதும் இளமை, 
    6) பிணி இல்லாத ஆரோக்கியமான உடல்,
    7) முயற்சிகளைக் கைவிடாத மனோபலம், (சலிப்பு வராத மனம்), 
    8) அன்பு நீங்காத மனைவி, 
    9) புத்திர பாக்கியம்,
    10) குறையாத புகழ்,
    11) சொன்ன சொல் தவறாமல் இருப்பதற்கான குணம், 
    12) எந்தத் தடையும் ஏற்படாத கொடை
    13) என்றும் குன்றாச் செல்வச் செழிப்பு, 
    14)செங்கோல் வளையாமல் பரிபாலிக்கும் அரசன்,
    15) துன்பமில்லாத வாழ்வு, 
    16) உன் பாதத்தின்மேல் பக்தி, 
    இவையனைத்தும் என்றென்றும் நீ அருள்வாய் தாயே !

    Friday, December 7, 2018

    Thank you dear almighty! For giving me everything exceeding my Expectation!





    மலர்கள் கேட்டேன் ! வானமே தந்தனை !
    தண்ணீர் கேட்டேன் ! அமிர்தம் தந்தனை!

    எதை நான் கேட்பின் உனையே தருவாய்!
               (   

                   I just asked for flowers ! you gave me a garden.!               I asked for water you gave me nectar.!
                            What I should ask for ? To Get your self? 
                           
                            )
    காட்டில்  தொலைந்தேன் வழியாய் வந்தனை
    இருளில் தொலைந்தேன் ஓழியாய் வந்தனை

    எதனில் தொலைந்தால் நீயே வருவாய்!
                                  (

     I lost in forest, you came as rescuing way.
    I lost in dark, you came as light.
    where should I lose myself? so that you will come.
                                  )
                      

    பள்ளம் வீழ்ந்தேன் ! சிகரம் சேர்த்தனை ! 
    வெள்ளம் வீழ்ந்தேன் !கரையில் சேர்ந்தனை

    எதனில் வீழ்ந்தால் உன்னிடம் சேர்ப்பாய்!


    (
     I fell in a pit you made me reach to peak.
    I fell in flood you saved me to reach the shore.
    In what  should I fall ? so that I can reach you.
    )

    Thursday, November 15, 2018

    மனதில் உறுதி வேண்டும் ..


    மனதிலுறுதி வேண்டும்,
    வாக்கினி லேயினிமை வேண்டும்;

    நினைவு நல்லது வேண்டும்,
    நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
    கனவு மெய்ப்பட வேண்டும்,
    கைவசமாவது விரைவில் வேண்டும்;
    தனமும் இன்பமும் வேண்டும்,
    தரணியிலே பெருமை வேண்டும்.
    கண் திறந்திட வேண்டும்,
    காரியத்தி லுறுதி வேண்டும்;
    பெண் விடுதலை வேண்டும்,
    பெரிய கடவுள் காக்க வேண்டும்,
    மண் பயனுற வேண்டும்,
    வானகமிங்கு தென்பட வேண்டும்;
    உண்மை நின்றிட வேண்டும்.
    ஓம் ஓம் ஓம் ஓம்

    Monday, October 29, 2018

    Three types of Human (மூவகை சீவ வர்க்கம் )

    According to Saiva doctrines there are three types of human. Categorised according to their level of consciousness of their living and the level of relationship with the almighty creation.

    Three Types

    1) சகலர் (one who cannot realise about their existence)

    •  One who is with all the three impurities as such as , 

  • மாயை

  • கன்மம்

  • ஆணவம் 
    •    
    2) பிரளயாகர் (who can partially realise )
    •  One who is without மாயை but still with other 2 impurities , 
    3) விஞ்ஞானர்  (who can fully realise)
    •  One who is without மாயை and கன்மம் but with ஆணவம்

    As expressed by Sekkizhar in பெரியபுராணம் (Periyapuranam).


    உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
    நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
    அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
    மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

    விளக்கம்:

    சகலர் - ஓத முடியாத ஒரு உருவம் . 
    பிரளயாகர் - நிலவு தலையில் உலவும் தலை கொண்ட வடிவம் . 
    விஞ்ஞானர்  - அளவு இல்லாத ஜோதி வடிவம் . 


    And this is re-iterated by Appar in தேவாரம் (Thevaram)





    விறகில் தீயினன் பாலில் படு நெய்போல்
    மறைய நின்றுளன் மாமணி சோதியன்
    உறவு கோல் நட்டு உணர்வுக் கயிற்றினால்
    முறுக வாங்கி கடைய முன் நிற்கவே 


    விளக்கம்:

    விறகு=அரணிக் கட்டை. அரணிக் கட்டையில் தீ இருப்பதும் பாலினில் நெய் இருப்பதும் நமது கண்களுக்கு நேரே தெரிவதில்லை. அரணிக் கட்டையை கடைந்தால் தீ ஏற்படுகின்றது. பாலினைத் தயிராக மாற்றிய பின்னர் மத்தினைக் கொண்டு அதனைக் கடைந்தால் வெண்ணெய் கிடைக்கின்றது. சாணை தீட்டப்படாத மாணிக்கக் கல் பிரகாசமாக இருப்பதில்லை. பட்டை தீட்டப்பட்ட பின்னர் மாணிக்கக் கல் மிகுந்த ஒளியுடன் பிரகாசிக்கின்றது. மேற்கண்ட பொருட்கள் போன்று இறைவனும் மறைந்து நிற்கின்றான். 

    அரணிக் கட்டை என்பது பழங்காலத்தில் தீ மூட்டுவதற்காக பயன்பட்டது. ஒரு அரணிக் கட்டையுடன் மற்றொன்றைத் தேய்த்து தீ எழுப்புதலை கடைதல் என்று கூறுவார்கள். 
    • சகலர்  - விறகில் தீயினன் . சிலருக்கோ விறகில் உள்ள தீயாக இருக்கிறான். Self realisation for them is very difficult as like igniting logs to catch on fire.
    • பிரளயாகர்  - பாலில் படு நெய். சிலருக்கு பாலில் உள்ள நெய்யாக இருக்கிறான். Self realisation is less difficult as like curdling milk and extracting ghee.
    • விஞ்ஞானர் - மாமணி சோதியன்.சிலருக்கு இறைவன் மணியில் உள்ள ஒளி போல வெளிப் படுகிறான். Its easy as like cleaning the opal stone to get the brightness


    உறவு கோல் நட்டு உணர்வுக் கயிற்றினால் முறுக வாங்கி கடைய முன் நிற்கவே
    -   God is hidden and can be sought by curdling with the stick of emotion Bakthi (உறவு கோல்) and with the rope of (உணர்வுக் கயிறு ) knowledge (மெய்யஞானம் )

    சிலருக்கு கடைய முன் நிற்கும்.
    சிலருக்கு வாங்கிக் கடைய முன் நிற்கும் 
    சிலருக்கு முறுக வாங்கிக் கடைய முன் நிற்கும்