Friday, October 19, 2018

நம சிவாய (Namah Shivaya) Meaning

நம சிவாய 


Namah Shivaya

This Five letter Word is a very significant mantra chanted all through the years across India in Hindu community. Today I am astonished to get to know the real meaning of this Mantra. Our ancestors are so intellectual that they did not coined any word in random. This word is a utter proof for that.



ந -> தீரோத  மலம் 
ம -> ஆணவ மலம் 
சி -> சிவன் 
வா ->அருள் 

ய -> ஆன்ம 


ந -> தீரோத  மலம் 


According Saiva doctrines, Every human in this world is bonded and which prevents them from enjoying the real freedom and infinite happiness as showered by mother nature. They classified these bonds as தீரோத  மலம்  and ஆணவ மலம் .  Only when one get rid of these bonds, one can feel the ecstasy of liberation called as Mukthi(முக்தி )Mukthi is attaining super conscious state and being in absolute liberation and integrating with nature.

Saiva doctrines saying தீரோத  மலம்   is intentionally created by God to kick us out of this birth and death cycle and creates us urge to search for the real pure self. தீரோத  மலம்  is God's Games.(திருவிளையாடல் )

ஆணவ மலம் is egoism.

ம -> ஆணவ மலம் 


Using this தீரோத  மலம்  one should get rid of the ஆணவ மலம்  .

சி -> சிவன் 


Shiva is the single supreme God who governs the whole world and creations.

வா ->திரு  அருள் 

It is Shiva's Arul. அன்பு is love we offer to the near and closed ones. Whereas அருள்  is greater than அன்பு and it is global love towards every creation in this world.


ய -> ஆன்ம 


ஆன்ம Every living being in this world. 

பொருள் (Meaning)


(யா ) என்கிற ஆன்மா,  (நா ) என்ற திரோதா மலத்தினாலே,  ( ம ) என்ற ஆணவ மலத்தை அழித்து,  ( வா ) என்ற இறைவனுடைய திரு அருள் துணை கொண்டு ( சி ) என்ற சிவத்தை அடைய வேண்டும் .

சீவன்(induviudal) சிவனாக வேண்டும் ! சீவனிலுள்ளே  உள்ள களிம்பு (மலம்) நீங்கினால் சீவன் சிவன் ஆகும் .


Another unique comparison of this is to that of a coconut, Only after the outer tender green shell(கன்மம் ) is removed and the inner hard shell(ஆணவம் ) is removed,  One can enjoy the nector of happiness inside. சீவன் (induvidual) can become சிவன் . i.e attain mukthi. 

To remember this and reinforce this thought of liberation, it has become a custom to bring the coconut while visiting temples.!


Reference (Discourse by Variya swamigal)


Sunday, May 13, 2018

Semolina or Rawa



Upma  would be the hardest breakfast to eat. When Mom makes breakfast, we will always saylike No..no. Later after childhood When Mum comes home tired after late nite work at chennai,She simply prepares hot rawa upma which is served with Sambar. And it tastes wholesome and delicious. And the bigger part is her love in feeding me hot with Sambar.

Today i take oath to prepare break fast for the family which i have skipped all these 5 years after Ahilan's birth. My entry is confined to dinner table and kitchen is under full care by Grand Ma. Grand Ma has really rescued me from all those night mares of preparing breakfast / lunch in the busy schedule of my day with 2 toddlers along with my software engineering work.

Today i made it a point to at-least prepare breakfast. And the dishes should be easy to cook and not much of time consuming. But yet needs to be healthy and traditional which has been followed in our home. And for tomorrow i choose to prepare vegetable upma with onion chutney. I indexed the recipes from  youtube for both of these.

While i was preparing mentally for these recipes, i suddenly delved in to the details behind sooji. Once i have asked my mom as to from where we are getting sooji. Is it from some grain? She did not had an answer too.

So i googled for an answer and the answer is interesting that Sooji or Semolina is byproduct(not flour)  of wheat milling process which transforms wheat in to flour . It is a good source of proteinfiber, phosphorus. And it is  very interesting to know that PASTA is also prepared from Semolina.

Parthiban loves to eat Pasta and i was always worried that PASTA is make of Maida. Now it makes me guilt free to serve him PASTA knowing it is by-product of wheat.

For those who are interested to read:


  1. Wheat milling process from Discovery (How stuff works)   https://www.youtube.com/watch?v=F4VoVLlyuS0
  2. Wiki Pedia Definition of Semolina or Rawa : https://en.wikipedia.org/wiki/Semolina

         

Thursday, April 26, 2018

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் அவை..



                                          நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் அவை 

   

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் -- என்றன்
   முன்னைத் தீயவினைப் பயன்கள் -- இன்னும்
   மூளா தழிந்திடுதல் வேண்டும்-இனி
  என்னைப் புதிய வுயிராக்கி-எனக்
   கேதுங் கவலையறச் செய்து -- மதி
   தன்னை மிகத்தெளிவு செய்து -- என்றும்
  சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்.

Saturday, April 21, 2018

நமசிவாய-துஞ்சலும் துஞ்சல் இல்லாத போழ்தினும்

துஞ்சலும் துஞ்சல் இல்லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின், நாள்தொறும்;
வஞ்சகம் அற்று அடி வாழ்த்த, வந்த கூற்று
அஞ்ச உதைத்தன, அஞ்சு எழுத்துமே.
                                                                                                               தேவாரம்
3.022.திருப்பஞ்சாக்கரப்பதிகம்

பண் – காந்தாரபஞ்சமம்




கருத்து: 

தூங்கும்பொழுதும், விழித்திருக்கும் பொழுதும், மனம் கசிந்து உருக நாள்தோறும் திருஐந்தெழுத்தை நினைத்துப் போற்றுங்கள். பல வழிகளில் திரிந்து செல்லும் தன்மையுடைய மனத்தை அவ்வாறு செல்லவிடாமல் தடுத்து ஒருமுகப்படுத்தி இறைவனையே நினைத்து அவன் திருவடிகளை வாழ்த்திப் போற்றிய மார்க்கண்டேயரின் உயிரை அவருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் இறுதியில் கவர வந்த கூற்றுவனை உதைத்து அழித்தன திருவைந்தெழுத்தே.


                                                                    திருச்சிற்றம்பலம் 

https://www.youtube.com/watch?v=L9jZSQG0vg0

Sunday, March 18, 2018

Simple contented life with mother nature - Baja Govindam





सुरमंदिरतरुमूलनिवासः
शय्या भूतलमजिनं वासः ।
सर्वपरिग्रहभोगत्यागः
कस्य सुखं न करोति विरागः ॥ १८॥ 

Take your residence in a temple or below a tree, wear the
deerskin for the dress, and sleep with mother earth as your
bed. Give up all attachments and renounce all comforts. Blessed
with such vairgya, could any fail to be content ?

These lines will made us to travel back in the revolution and just to wander in the forest with purpose of life is just to live that day. With such a simple purpose just to spend the given day with only basic requirements of food and shelter how good a life will be?!!

However the sixth knowledge element that LORD has given us , made our ancestors to think and made them to move away from the nature and to seek for some thing better , even better and even better......
        And eventually we are now where we are now. But today though we are offered with all such luxuries and a life style far better than our ancestors had dreamt of , we still complain and feel sick of the life that we are all blessed .
          And still we are searching for the happiness. How miserable it is. ?

We may have to sow a seed of thought in our young one's mind which will make our grand children to get back to the nature from where our ancestor has started with??. With the hope that it will happen after many yugas?

For now Just relax and "Praise the lord" for he has blessed us with everything for a comfortable and luxurious living in this earth. After all it is the contentedness of the mind which creates healthy and long living life.

Adi Sankaracharya's Baja Govindam in this stanza truly provoked me these thoughts. And it is insisting me to praise the lord for every moment and to live a contented life;













Monday, March 5, 2018

பல வேடிக்கை மனிதரைப் போல வீழ்வேன் என்று நினைத்தாயோ





நல்லதோர் வீணைசெய்தே - அதைநலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ ?
சொல்லடி , சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ, இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே ?
சொல்லடி சிவசக்தி ! - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ ?
விசையுறு பந்தினைப் போல் - உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல் கேட்டேன்,
நசையறு மனம் கேட்டேன் - நித்தம்
நவம்எனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும் - சிவ
சக்தியைப் பாடும்நல் அகம்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன், இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ ?


I am shocked to read this poem. These thoughts of Barathiyar exactly running in my mind now. I am very happy that i can able to follow Barathiyar in my thoughts. I was just wondering why GOD has to give intelligent to humanity knowing that LOVE(அன்பு ) alone is enough to live in this world in peace.

               It is the intellect which made us to discriminate, analyse, forecast and judge , imagine and all these leads to confusion and mind pollution. To live in this world is to live like a COW ( பசு) with its purpose is to shower love unconditionally to it's ones without expecting anything in return. 
                  But it is rather difficult to live a life with unconditional love in the current society. Is it so because our ancestors have predicted that in Kali Yuga, every thing would become intellectual and there would not be any thirst for seeking IDEAL amongst people.
  
 Bharthiyar's words exactly asking this question to our mother nature (சிவா / சக்தி ).

எனைச்சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்?


Why Dear Mother nature , you have given me  the power of intellect while she knows that it would spoil human like a musical instrument which is thrown to the dust.

நல்லதோர் வீணைசெய்தே - அதைநலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ ?

So dear Mother nature please give me enough power to use my intellect wisely so that my living in this world will not be a burden to the land and it will effectively fruitful.

வல்லமை தாராயோ, இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே ?
சொல்லடி சிவசக்தி ! - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ 


My body should be in full co-ordination with me a like ball which runs in the direction in which we are spinning it and i should be able to perform all the actions.
Give me a mind which is devoid of anger and desires. Give me a life which is refreshing and enlightening and born anew every day. 

விசையுறு பந்தினைப் போல் - உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல் கேட்டேன்,
நசையறு மனம் கேட்டேன் - நித்தம்
நவம்எனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,

Even when the skin is on fire - a heart that sings thy praise I ask.

தசையினைத் தீசுடினும் - சிவ
சக்தியைப் பாடும்நல் அகம்கேட்டேன்,

Unshakeable wisdom I ask - Is there anything that stops thee from bestowing these?

அசைவறு மதிகேட்டேன், இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ ?


Monday, January 22, 2018

திருப்புகழ் - Explaining the moment of death and the need to surrender unto the Shiva

திருப்புகழ்

பாடல் 389

                                                    விரகொடு வளைசங் கடமது தருவெம்
                                                            பிணிகொடு விழிவெங்  கனல்போல
           வெறிகொடு சமனின் றுயிர்கொளு நெறியின்
     றெனவிதி வழிவந் திடுபோதிற்

கரவட மதுபொங் கிடுமன மொடுமங்
     கையருற வினர்கண் புனல்பாயுங்
கலகமும் வருமுன் குலவினை களையுங்
     கழல்தொழு மியல்தந் தருள்வாயே

பரவிடு மவர்சிந் தையர்விட முமிழும்
     படவர வணைகண்  டுயில்மாலம்
பழமறை மொழிபங் கயனிமை யவர்தம்
     பயமற விடமுண் டெருதேறி

அரவொடு மதியம் பொதிசடை மிசைகங்
     கையுமுற அனலங்  கையில்மேவ
அரிவையு மொருபங் கிடமுடை யவர்தங்
     கருணையில் மருவும்  பெருமாளே.


......... சொல் விளக்கம் .........

விரகொடு வளை சங்கடம் அது தரு வெம் பிணி கொடு ...
சாமர்த்தியத்துடன் சூழ்ந்து துன்பத்தைத் தருகின்ற கொடிய
பாசக் கயிற்றைக் கொண்டு,

விழி வெம் கனல் போல வெறி கொடு சமன் நின்று ... கண்கள்
தீய நெருப்புப்போல கோபத்துடன் யமன் வந்து வாயிலில் நின்று,

உயிர் கொள்ளும் நெறி இன்று என ... உயிரைக் கொள்ள
வேண்டிய முறை நாள் இது என்று தெரிந்து,

விதி வழி வந்திடு போதில் ... விதியின் ஏற்பாட்டின்படி
நெருங்குகின்ற அச்சமயத்தில்,

கரவடம் அது பொங்கிடு மனமொடு மங்கையர் உறவினர்
கண் புனல் பாயும் கலகமும் வரு முன்
 ... வஞ்சகம் மிகுந்த
மனத்துடன் மாதர்கள்,சுற்றத்தார்கள் ஆகியோரின் கண்களில் நீர்
பாய்கின்ற குழப்பம் வருவதற்கு முன்பாக,

குலவினை களையும் கழல் தொழும் இயல் தந்து
அருள்வாயே
 ... முந்தை ஊழ்வினைகளைத் தொலைக்கும்
திருவடிகளைத் துதிக்கும் ஒழுக்கத்தைக் கொடுத்து அருள் புரிவாயாக.

பரவிடும் அவர் சிந்தையர் ... தன்னைத் துதிப்பவர்களுடைய
மனத்தில் உறைபவரும்,

விடம் உமிழும் பட அரவு அணை கண் துயில் மால் ...
நஞ்சைக் கக்கும் பல பணாமுடிகளை உடைய பாம்பு (ஆதிசேஷன்) என்ற
படுக்கையில் உறங்குபவரும் ஆகிய திருமால்,

அம் பழ மறை மொழி பங்கயன் ... அழகிய பழைய வேதத்தை
ஓதுபவனும், தாமரையில் வீற்றிருப்பவனும் ஆகிய பிரமன்,

இமையவர் தம் பயம் அற விடம் உண்டு எருது ஏறி ...
அங்கிருந்த தேவர்கள் அனைவரின் பயம் நீங்க ஆலகால விஷத்தை
உட்கொண்டு, (நந்தியாகிய) ரிஷப வாகனத்தின் மேல் ஏறி,

அரவொடு மதியம் பொதி சடை மிசை கங்கையும் உற ...
பாம்புடன், சந்திரனையும் தரித்த ஜடையின் மேல் கங்கையையும்
பொருத்தி,

அனல் அம் கையில் மேவ ... நெருப்பு அழகிய கையில் விளங்க,

அரிவையும் ஒரு பங்கு இடம் உடையார் தங்கு ... பார்வதி
தேவியை தம் உடலின் இடது பாகத்தில் அமைத்துக் கொண்டவராகிய
சிவ பெருமான் (ஆகிய மும்மூர்த்திகளும்) வீற்றிருக்கும்

அருணையில் மருவும் பெருமாளே. ... திருவண்ணாமலையில்
எழுந்தருளியுள்ள பெருமாளே.